சந்திராயன் அனுப்பிய படங்கள் - கலாம் மகிழ்ச்சி
பெங்களூர்: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்த்ராயன் விண்கலம் முதன்முதலாக பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ள படங்களைப் பார்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சந்தோஷம் தெரிவித்துள்ளார்.
10 நாட்களுக்கு முன் பிஎஸ்எல்வி மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது சந்த்ராயன். இப்போது நிலவுக்கு பாதி வழியில் உள்ள சந்த்ராயன் பூமியை படம் பிடித்து அனுப்ப ஆரம்பித்துள்ளது.
அதில் உள்ள டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) முதல் படமாக ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைப் பகுதியை படம் பிடித்து அனுப்பியது. இந்தப் படம் 19ம் தேதி காலை 8 மணிக்கு எடுக்கப்பட்டது. அப்போது சந்த்ராயன் பூமியிலிருந்து 9,000 கி.மீ உயரத்தில் பறந்தது.
இதையடுத்து 12.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடலோரப் பகுதியை சந்த்ராயன் படம் பிடித்து அனுப்பியது. அப்போது அது பூமியிலிருந்து 70,000 கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
இந்தப் படங்களை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் காட்ட அவர் பெரும் ஆர்வத்துடன் அதைப் பார்த்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இதேபோல முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சந்திராயன் அனுப்பிய படங்களைப் பார்த்து சந்தோஷம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாதவன் நாயர் என்னிடம் காட்டிய படங்ள் மிகவும் சிறப்பானவை. துல்லியமாக உள்ளன.
ஒவ்வொரு இந்தியனும், இந்த வெற்றிக்காக பெருமைப்பட வேண்டும் என்றார்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications