மைசூரில் இந்திப் பாட்டு போட்ட எப்.எம். நிலையம் சூறை
Subscribe to Oneindia Tamil
மைசூர்: கர்நாடக மாநிலம் உதயமானதன் அடையாளமாக கொண்டாடப்படும் கன்னட ராஜ்யோத்சவா தினத்தின்போது இந்திப் பாடல்களை போட்ட எப்.எம். ரேடியோ நிலையத்தை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர்.
நவம்பர் 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கர்நாடகம் முழுவதும் சனிக்கிழமை கன்னட அமைப்புகள், அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் மைசூரில் உள்ள எப்.எம். ரேடியோ நிலையத்தில், கன்னடப் பாடல்களுக்கு இடையே, இந்திப் பாடல்களை ஒலிபரப்பினர். இதை அறிந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் அந்த வானொலி நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
வானொலி நிலையத்தை அடித்து சூறையாடினர். இதில் 9 கம்ப்யூட்டர்கள், நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இதுகுறித்து போலீஸில் வானொலி நிலையம் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications