சொத்துப் பிரச்சினை: தம்பியைக் கொடூரமாகக் கொன்ற அண்ணன்
குல்பர்கா: சொத்துக்கு போட்டியாக வந்து விடுவான் என்ற பயத்தில் கர்நாடக மாநிலம் குல்பர்காவில், 16 வயது தம்பியைக் கொடூரமாகக் கொன்ற கல்லூரி மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
குல்பர்கா, சர்வேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பத்தாவது வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் சந்தோஷ். பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டின் மேல் அறையில் இருவரும் தூங்கினர். அப்போது நள்ளிரவுக்கு மேல் தம்பியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார் சந்தோஷ்.
பின்னர் அருண்குமாரின் உடலை சாக்குப் பையில் போட்டு மூடி விட்டு வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார்.
இன்று காலை அருண்குமாரின் தாயார் சாக்குப் பையைப் பார்த்து குழம்பி, திறந்தபோது அருண்குமாரின் உடலைப் பார்த்து அதிர்ந்தார்.
அருண்குமார் குடும்பத்துக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவற்றை தம்பியுடன் பங்கிட வேண்டுமே என்ற கோபத்தில், அருண்குமாரை, சந்தோஷ் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications