வான் புலிகள் தாக்குதலின்போது பங்கருக்குள் பதுங்கிய ராஜபக்சே

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கொழும்பு புறநகரில் மின் நிலையம் மீது விடுதலைப் புலிகளின் விமானப் பிரிவினர் குண்டு வீச்சு நடத்தியபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிபர் ராஜபக்சே பங்கருக்குள் புகுந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த செவ்வாய் கிழமை விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் கொழும்பு நகரில் தாக்குதல் நடத்தின. களனிதிசா அனல்மின் நிலையத்தின்மீது வான் புலிகளின் போர் விமானம் குண்டு வீசித் தாக்கியது.

அப்போது ராஜபக்சேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் புலிகள் தாக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்தது.
இதையடுத்து அதிபர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால பதுங்கு குழிக்குள் ராஜபக்சே சென்று பதுங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லகபிமா என்ற சிங்கள இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பங்கருக்குள் ராஜபக்சே புகுந்து கொண்டதை அதிபர் மாளிகை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கரைத்தான் அதிபர் மாளிகை வட்டாரங்கள், சிறப்பு ஏற்பாடுகள் என கூறியுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+