28 இலங்கை மீனவர்கள் விடுதலை - தூதரகத்தில் இன்று ஒப்படைப்பு
தூத்துக்குடி: ராமநாதபுரம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்ட 28 இலங்கை மீனவர்கள் இன்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசில் ஓப்படைக்கப்பட்டனர். அவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 28 மீனவர்களையும் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்பின்பு அவர்கள் தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் இலங்கை தூதரகமும், இலங்கை கடற்படையும் அவர்களை அழைத்து செல்வதில் கால தாமதம் செய்து வந்தன. கடந்த 5 மாதமாக மீனவர்கள் தூத்துக்குடி காவல் நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் 28 மீனவர்களையும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தது.
இதற்காக நேற்று மாலை 28 மீனவர்களையும் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
இன்று காலை இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் 28 மீனவர்களையும் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார்
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications