28 இலங்கை மீனவர்கள் விடுதலை - தூதரகத்தில் இன்று ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ராமநாதபுரம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்ட 28 இலங்கை மீனவர்கள் இன்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தெர்மல் நகர் போலீசில் ஓப்படைக்கப்பட்டனர். அவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மாதம் 28 மீனவர்களையும் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்பின்பு அவர்கள் தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் இலங்கை தூதரகமும், இலங்கை கடற்படையும் அவர்களை அழைத்து செல்வதில் கால தாமதம் செய்து வந்தன. கடந்த 5 மாதமாக மீனவர்கள் தூத்துக்குடி காவல் நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் 28 மீனவர்களையும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தது.

இதற்காக நேற்று மாலை 28 மீனவர்களையும் இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

இன்று காலை இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் 28 மீனவர்களையும் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+