பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் - கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூரில் அமைக்கப்படவுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதல்வர் கருணாநிதி அடுத்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் அடிக்கல் நாட்டுவார் என மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. மத்திய அரசின் அனுமதிக்காக திட்டம் காத்துள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.

இதே விழாவில், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டட கட்டுமானப் பணியையும் அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். அரியலூர் அரசு பொறியியல் கல்லூரியையும் அவர் அன்றைய தினமே தொடங்கி வைப்பார் என்றார் அவர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+