இலங்கை தமிழர்களுக்காக திரைப்பட தொழிலாளர்கள் 5-ந் தேதி உண்ணாவிரதம்!
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் (ஃபெப்சி) அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் வரும் நவம்பர் 5-ம் தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து ஃபெப்சி தலைவர் விஜயன், பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் 5-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சம்மேளனத்தை சார்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள செந்தில் ஸ்டுடியோ அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் உள்ளூர் திரைப்பட, தொலைக்காட்சி படப் பிடிப்புகள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதலோடு நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications