நிதி- நிவாரண உதவி புலிகள் கைக்குப் போகக் கூடும்: ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி வசூலிக்கும் நிதியும்,நிவாரணப் பொருட்களும்,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேராமல் விடுதலைப் புலிகளுக்குப் போய் விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு இரங்கல் தெரிவித்து கவிதை எழுதியவர் முதல்வர் கருணாநிதி. எனவே இதுபோல வசூலிக்கப்படும் நிதியும்,நிவாரணப் பொருட்களும் புலிகள் கைக்குப் போய்ச் சேராதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவது இயற்கைதான்.
தமிழகத்திலிருந்து ஏற்கனவே பெருமளவிலான பெட்ரோல் கடத்தப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல முதல்வர் கருணாநிதி மூலம் வசூலிக்கப்படும் நிதியும், நிவாரணப் பொருட்களும் புலிகளை சென்றடையுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மக்களிடமிருந்து வற்புறுத்தி நிதி வசூலிக்கிறார்கள். அதேபோல, அரசு ஊழியர்களின் அனுமதியைப் பெறாமலேயே அவர்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரூ. 5 லட்சம் நிதியளித்துள்ளார். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?, அவர் வருமான வரி கட்டுகிறாரா?. இதற்கெல்லாம்,மக்களுக்கு கருணாநிதி விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications