நாளை சூரசம்ஹாரம் - திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: புகழ் பெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை மாலை நடைபெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழா அக்டோபர் 29ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை மாலை நடைபெறுகிறது.
நாளை மாலை 4 மணியளவில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காண லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள். இதையொட்டி அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்கள் பலவற்றிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications