ராமேஸ்வரத்தில் காந்தி சிலை அவமதிப்பு!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் காந்தி சிலையை சமூக விரோதிகள் அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பில் மகாத்மா காந்தியின் அஸ்தியை கொண்டுள்ள சிலை கடந்த பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை சில சமூக விரோதிகள் நள்ளிரவில் அவமதித்தனர். இதை காலையில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காந்தி சிலையை தூய்மைபடுத்தினர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
காந்தி சிலையை அவமதித்தவர்களை விரைந்து கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பிலும், சமூக நல ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications