பதவி விலகும் விடுதலைச் சிறுத்தை எம்எல்ஏ!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வப்பெருந்தகை.

அவருக்கும் வி.சி. தலைவர் திருமாவளவனுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் நடந்து வருகிறது.

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,

எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ராஜினாமா கடிதத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சபாநாயகரிடம் அளிப்பேன்.

என்னை நம்பி வாக்களித்த மங்களூர் தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது குறித்த தன்னிலை விளக்க கூட்டத்தை நாளை (வியாழக்கிழமை) திட்டக்குடியில் நடத்த உள்ளேன்.

இதில் பங்கேற்கும்படி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், வார்டு குழு தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பியுள்ளேன். மீதியை நாளை சொல்கிறேன் என்றார் செல்வப் பெருந்தகை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+