பங்குச் சந்தை சரிவு: மன்மோகன் சிங்குக்கு ஜெ கேள்வி!

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எப்போதும் விளம்பரப் பிரியர். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது அதற்கு தானே காரணம் என்று கூறிக் கொள்வார்.
ஆனால் ஆனால் பங்குச் சந்தை சரிவு ஏற்படும் போது அதற்கு சர்வதேச பொருளாதாரம் காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்கிறார். பங்குச் சந்தை சரிவை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் பணப் புழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இதனையும் மீறி அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டு சந்தை சரிந்துள்ளது. பல முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கான கோடிகளில் பணத்தை இழந்துள்ளனர்.
பங்குகளை விற்று பணப் புழக்கத்தின் மூலம் வந்த பணத்தை கொண்டு சென்றது யார்? அல்லது அவை எந்த அமைப்புகள்?
சர்வதேச வீழ்ச்சியில் இழந்த தங்கள் பணத்தை இயன்ற அளவுக்கு இந்திய சந்தையிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றனவா? இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்.
மேலும் பணப் புழக்கத்தில் ஈடுபடுமாறு எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கிகள் சிதம்பரத்தால் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
யாரோ லாபம் பெற இந்த நிறுவனங்களை ஏன் உறிஞ்ச வேண்டும். இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications