Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரன்வேயில் உரசிய விமான இறக்கை-தப்பிய பயணிகள்

Subscribe to Oneindia Tamil

Air India
மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கை ரன் வேயில் உரசி விபத்துக்குள்ளானது. இருப்பினும் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஏர் இந்தியா ஏர்பஸ் விமானம் இன்று ஜெட்டாவிலிருந்து காரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் 161 பயணிகளும், விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது விமானம் வலதுபக்கமாக அதிகமாக சாய்ந்தது. இதில் வலது பக்க இறக்கை ரன்வேயில் பட்டு உரசி, நொறுங்கியது.

இதனால் விமானம் தடுமாறியது. ஆனால் பைலட்டின் சுதாரிப்பான செயல்பாட்டால் விமானம் ரன்வேயில் விழாமல் பத்திரமாக ஓடி நின்றது.

காலை 9.15 மணிக்கு நடந்த இந்த விபத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விமானத்தில் இருந்த 161 பயணிகளும், ஊழியர்களும் ஒரு காயமுமின்றி உயிர் தப்பினர்.

விமானத்திற்கும் வேறு பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. வலது பக்க இறக்கை மட்டுமே சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+