டிக்கெட் 'விற்ற' காங்கிரஸ்- ஆல்வா குற்றச்சாட்டு

இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது கட்சியின் டிக்கெட்களை பணத்தை வாங்கிக் கொண்டு விற்று விட்டது மாநில காங்கிரஸ் தலைமை என மார்கரெட் ஆல்வா குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தையும், கட்சிக்குள் பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மார்கரெட் ஆல்வாவின் புகார் குறித்து கட்சியின் மத்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு விடப்படவுள்ளது. ஏ.கே.அந்தோணி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு விரைவில் கூடி மார்கரெட் ஆல்வா மீது விசாரணை நடத்தவுள்ளது.
மார்கரெட் ஆல்வா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications