இந்தியாவில் போலியோ ஒழிப்பில் பி்ல்கேட்ஸ்

அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பிரமிப்பூட்டும் வகையில் போலியோ நோய் பாதிப்பு குறைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் போலியோவின் பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் அந்த நோயைக் குறைக்க தனது பில் அண்ட் மெலின்டா அறக்கட்டளை சார்பில் கணிசமான உதவிகள் அளிக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் அறிவித்திருந்தார்.
சென்னது போலவே புதன்கிழமை இந்தியா வந்த அவர், தனது அறக்கட்டளையின் இந்தியப் பிரிவைத் துவக்கி வைதார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது இந்தியாவில் போலியோ ஒழிப்புக்காக சொட்டு மருந்து முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதைவிட ஊசிமூலம் போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதே அறிவுப்பூர்வமானது, அதிக பலன் தரக்கூடியது. அடுத்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் போலியோ நோயே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே என் நோக்கம், என்றார் பில் கேட்ஸ்.
சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் பாகிஸ்தான், இந்தியாவில்தான் இன்னமும் அந்நோய் பாதிப்பு தொடர்கிறது. குறிப்பாக உத்திரப்பிரதேசம், பீகார், தமிழகத்தில் போலியோ நோயாளிகள் அதிகம். கடந்த ஆண்டு புதிதாக 500 பேருக்கு போலியோ நோய் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக பல நாடுகள் தங்கள் சுகாதார செலவைக் குறைத்துக் கொண்டு வருவதாகவும், இது மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறினார் பில்கேட்ஸ்.












Click it and Unblock the Notifications