பரங்கிமலை சர்ச்சில் இயேசு சிலை உடைப்பு

Subscribe to Oneindia Tamil

Church Cross
தமிழகத்தில் சமீபத்தில் ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ சர்ச்சுகளில் சில விஷமிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவங்களுக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். எச்சரிக்கையும் விடுத்திருந்தார். போலீஸாரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டதால், சர்ச்சுகள் மீதான தாக்குதல் சற்றே குறைந்தது.

இந்த நிலையில் சென்னை, பரங்கிமலை புனித தோமையர் சர்ச்சில் சில விஷமிகள், இயேசு நாதர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சர்ச்சின் நுழைவாயிலில் இரு கைகளையும் விரித்து ஆசிர்வதிக்கும் கோலத்தில் ஒரு இயேசுநாதர் சிலை உள்ளது. இந்த சிலையை வணங்கி விட்டுத்தான் சர்ச்சுக்கு வருவோர் மலை மீது செல்வார்கள்.

இந்த சிலையின் கை மற்றும் மார்புப் பகுதியை சில விஷமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லிலும் ...

இதற்கிடையே, திண்டுக்கல்லில் தோமையார் புரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில், 36 கல்லறைகளில் இருந்த சிலுவைகளை சில விஷமிகள் அடித்து சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+