அமெரிக்காவுக்கு ஆள் கடத்தல்: சரவண பவன் ராஜகோபால் மகன் கைது
சென்னை: போலி விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பியதாக சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமார் கைதாகியுள்ளார்.
ஜீவஜோதி வழக்கில் சிக்கி மீண்டுள்ள சரவண பவன் ராஜகோபால் குடும்பத்திற்கு புதுச் சிக்கல் எழுந்துள்ளது. அவரது மகன் சிவக்குமார், போலி விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆட்களை கடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
சரவண பவன் ராஜகோபாலின் மகன் சிவக்குமார். இவர் வெளிநாடுகளில் உள்ள சரவண பவன் கிளைகளின் பணிகளைப் பார்த்துக் கொள்கிறார்.
இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளுக்குத் தேவையான ஆட்களை, போலி விசாக்கள் மூலம் அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது.
இதையடுத்து போலீஸார் நேற்று இரவு சிவக்குமாரை கைது செய்தனர். அவருடன் ராமு என்பவரும் கைதானார். சிவக்குமார், போலி ஆவணங்களைக் காட்டி விசாக்கள் பெற்று நான்கு பேரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
அவர் மேலும் பலரையும் இவ்வாறு அனுப்பி வைத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இன்று சிவக்குமாரை நீதிபதி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளனர். பின்னர் போலீஸ் காவலில் எடுத்து அவரை தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்புதான் நடிகை புளோரா இதே போன்ற புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார் என்பது நினைவிருக்கலாம்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications