நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்: டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாமக தலைவர்களுடன் தினசரி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
செசன்னை துறைமுக நீரிழி நோய் சிறப்பு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியார்களிடம் அவர் பேசினார். அப்போது திமுக- பாமக இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.
அதற்கு டி.ஆர்.பாலு பதிலளிக்கையில், தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அன்புமணி, ஏ.கே.மூர்த்தி, ராமதாஸ், அதாவது புதுச்சேரி பேராசிரியர் ராமதாஸ் ஆகியோருடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அனைவரும் ஒரே அங்கம்தான் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications