தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - விசாரணைக்கு உத்தரவு
சென்னை: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தங்களது கடற்படைக்கு இதில் தொடர்பில்லை என்று இலங்கை துணைத் தூதரகம் மறுத்துள்ளது.
நவம்பர் 7ம் தேதி கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு மீனவர் காயமடைந்தார். இலங்கை கடற்படைதான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்வளத்துறை இணை இயக்குநர் தில்லை கோவிந்தன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ விவரம், ஏற்பட்ட பாதிப்பு, துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணங்கள், சம்பவம் நடந்தபோது தமிழக படகுகள் இந்திய எல்லைக்குள் இருந்தனவா, இதைத் தடுக்க என்ன வழிகள் என்பது குறித்து இந்த விசாரணை அதிகாரி விசாரித்து அரசுக்கு அறிக்கை கொடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரன்யம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என்றும், 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை மீன்வளத்துறை செயலாளரிடம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மறுப்பு
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படைக்கு எந்தத் தொடர்பும் இல்லை என இலங்கை துணைத் தூதரகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 26ம் தேதி ஏற்பட்ட இந்திய - இலங்கை கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை இலங்கை அரசு உறுதியுடன் கடைப்பிடித்து வருகிது. இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது.
நவம்பர் 7ம் தேதி சம்பவத்தில் கடற்படைக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அன்றைய தினம் காங்கேசன்துறையை விட்டு கடற்படை படகுகளோ, கப்பல்களோ எங்கும் செல்லவில்லை.
அன்றைய தினத்தில் கோடியக்கரை - காங்கேசன்துரை மார்க்கத்தில் எந்தத் துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை.
இந்த சம்பவம் விடுதலைப் புலிகளின் கைவரிசையாகத்தான் இருக்கும். இந்திய, இலங்கை நல்லுறவைக் கெடுக்க விடுதலைப் புலிகள்தான் இவ்வாறு செய்திருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications