நம்பி்க்கை இல்லாத் தீர்மானம் வந்தால் ஆதரிக்க மாட்டோம்: ராமதாஸ்

திருச்சி வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக சட்டசபையில், திமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை பாமக ஆதரிக்காது. ஆதரிப்பதற்குத் தேவையான எந்தக் காரணமும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.
ஒரு வேளை அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், பாமக நடுநிலை வகிக்கும்.
காங்கிரஸ் ஆதரவுடனேயே திமுக ஆட்சி தொடர முடியும், முழுப் பதவிக்காலத்தையும் முடிக்க முடியும். எனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் திமுக அரசை கவிழ்க்க வேண்டிய கேள்வியே எழவில்லை.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி நினைத்தால் திமுக ஆட்சியைக் கவிழ்க்க முடியும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், காங்கிரஸுக்குப் பாமக ஆதரவு தெரிவிக்கும்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்திலும் தேர்தல் வருமா என்பது காங்கிரஸ் கட்சியின் கையில்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக எடுக்கும் முடிவே இறுதியானது.
காங்கிரஸ் கட்சி இல்லாமல் தமிழகத்தில் 3வது அணியை அமைக்க முடியாது. அது சாத்தியமில்லை என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications