ராஜபக்சே இன்று இந்தியா வருகை-பிரமதருடன் முக்கிய பேச்சு

வங்கக் கடல் நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்டெக்கின் 3 நாள் மாநாடு டெல்லியில் 11ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உண்டாக்குவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
முதல் கட்டமாக வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று மாலை டெல்லி வருகிறார். வரும் 13 ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜபக்சே சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களையும் ராஜபக்சே சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் போரினால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், இந்தியத் தலைவர்களிடம் ராஜபக்சே விளக்குவார் எனத் தெரிகிறது.
உடனடியாக போர் நிறுத்தத்தை இலங்கை மேற்கொள்ள வேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
தமிழக கட்சிகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக புலிகளும் அறிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications