விபச்சாரம்: 3 துணை நடிகைகள் கைது
சென்னை: சென்னை திருமங்கலத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 3 இந்தித் திரையுகல துணை நடிகைகளை போலீஸார் கைது செய்தனர். அவர்களது புரோக்கர் பிரதீப் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் பகுதியில் பங்களாக்களில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு ரெய்டில் இறங்கினர்.
முல்லை நகர் 5வது தெருவில் உள்ள ஒரு வீடு படு பிசியாக இருப்பதை போலீஸார் நோட்டம் இட்டனர். அங்கு அதிக அளவில் பைக்குகள், கார்கள் வந்து போவதை வைத்து அங்கு விபச்சாரம் நடக்கலாம் என போலீஸார் சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து அந்த வீட்டுக்குப் போய் விட்டு வந்த ஒரு நபரை மடக்கி விசாரித்தபோது விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து விபச்சார புரோக்கர் பிரதீப் சிங் என்பவரின் போன் எண்ணை போலீஸார் பெற்றனர்.
அவரிடம் போலீஸார் வாடிக்கையாளர்கள் போல பேசி விவரம் கேட்டனர். அதற்கு பிரதீப் சிங் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை அழகிகளுக்கு ரேட் வைத்திருப்பதாகவும், நடிகைகள் கூட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாறு வேடத்தில் ஒரு போலீஸ்காரர் அந்த வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த 3 இந்தி நடிகைகளை புரோக்கர் சிங் காட்டினார். ரேட்டையும் கூறினார்.
இந்தத் தகவல்களை செல்போன் மூலம் காத்திருந்த தனிப்படை போலீஸாருக்கு மாறு வேட போலீ்ஸ்காரர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து சுற்றி வளைத்தனர்.
அங்கிருந்த 3 நடிகைகளையும் பிடித்தனர். அவர்களது பெயர்கள் ரியா, பிங்கி, ஷோபா எனத் தெரிய வந்தது. 3 பேரும் இந்தியில் துணை நடிகைகளாக உள்ளனர்.
இவர்களில் ரியா, பார்க்க நடிகை ரியா சென்னைப் போலவே இருக்கிறார். இதனால் அவரை ரியா சென்று கூறி பலரை ஏமாற்றி பணம் கறந்துள்ளாராம் பிரதீப் சிங். இதை விட முக்கியானது, ஷாருக்கானுடன் ஒரு படத்தில் இந்த ரியா டான்ஸ் ஆடியுள்ளார்.
3 பேரையும் மகளிர் காப்பகத்திற்குப் போலீஸார் அனுப்பி வைத்தனர். புரோக்கரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications