கல்வி திட்டத்தில் ரூ. 1 கோடி ஊழல்-5 பேர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்எஸ்ஏ) திட்டத்தில் ரூ. 1 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதையடுத்து 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியோர் புகார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உண்டு-உறைவிடப் பள்ளி, பாலர் திட்டத்தில், பயிற்றுனர்களுக்கு பயிற்சி முகாம்கள் போன்றவைகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் முறையற்ற வகையில் வரவு-செலவு செய்துள்ளதும், ரசீதுகள், வவுச்சர்கள் இன்றி பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை தந்தது.

இதன் பேரில் வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த விஸ்வநாதன் (தற்போது நாமக்கல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.) உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், அலுவலக கண்காணிப்பாளர் கிரினி வாசன், செல்வராஜ், இள நிலை உதவியாளர் ரமேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+