சென்னை விமான நிலையத்தில் ஊடுறுவிய வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

Chennai Airport
சென்னை: பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பதாக கூறப்படும் சென்னை விமான நிலையத்தின் முக்கியப் பகுதிக்குள் 20 வயது வாலிபர் ஒருவர் ஊடுறுவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

ஊடுறுவியர் நபரின் பெயர் தாமோதரன். ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நேற்று மாலை அவர் அண்ணா பன்னாட்டு முனையத்தின் முக்கியப் பகுதிக்குள் ஊடுறுவி விட்டார்.

அவரைப் பிடித்த விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் தாமோதரனிடம் விசாரித்தபோது, தெலுங்கில் அவர் பேசியு்ளார். இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் தாமோதரன் ஒப்படைக்கப்பட்டார். அந்த நபர் நக்சலைட்டாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில், கியூ பிரிவு போலீஸாரும், உளவுப் பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும் முக்கியப் பகுதிக்குள் இளைஞர் ஒருவர் ஊடுறுவியது, விமான நிலைய பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவிலேயே சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக லாக்ஹீட் மார்ட்டின் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+