திருமா-பாரதிராஜா: கைது செய்ய காங். வற்புறுத்தல்
சென்னை: விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித்துப் பேசிய திருமாவளவன், பாரதிராஜாவைக் கைது செய்யுமாறு சுதர்சனம் தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு முதல்வர் கருணாநிதியை நேரி்ல் சந்தித்து வலியுறுத்தியது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து,
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் பேசினாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமாவளவன் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுகிறார். ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை. அமெரிக்காவின் உளவுத் துறைதான் அதற்கு காரணம் என்கிறார்.
ராமேஸ்வரம் கூட்டத்தில் பாரதிராஜாவும், விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசினார். மன்சூர் அலிகானும் ஆதரித்து பேசுகிறார். இவர்களையும் கைது செய்ய வேண்டும். ராமேஸ்வரம் பேரணிக்கு ஏற்பாடு செய்த ராம.நாராயணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.












Click it and Unblock the Notifications