தொண்டு நிறுவனம் மீது மோசடி புகார் - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மதுரை: மகளீர் மன்றத்தினரிடம் மோசடி செய்த தொண்டு நிறுவன அதிபரை கைது செய்யக் கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
மதுரை காமராஜர்புரம் பகுதியில் பல மகளிர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மன்றங்கள் குளோரி ஜீவா என்பவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இலவச வீட்டு மனை, இலவச கியாஸ் அடுப்பு, இலவச பட்டா, போன்றவைகள் பெற்று தருவதாக கூறி அப்பகுதி மக்களிடம் இவர் பல லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பல மாதங்கள் ஆன நிலையில் அவர் கூறியபடி எந்த வித அரசு சலுகையும் பெற்றுத்தரவில்லையாம்.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் குளோரி ஜீவா பணத்தையும் திருப்பிதரவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் தங்கள் பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தரவேண்டியும், அவரது தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டனர்.
மோசடி தொண்டு நிறுவன நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications