அத்வானி விழா: ரஜினிக்கு ஸ்பெஷல் அழைப்பு!!

Subscribe to Oneindia Tamil

Advani
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி நாளை சென்னை வருகிறார்.

அவர் எழுதியுள்ள 'எனது நாடு, எனது வாழ்க்கை' (My country; M life) என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

சென்னை நாரத கான சபாவில் நடைபெறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் வெளியிடுகிறார். பத்திரிகையாளர் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பிஜேபி மாநிலத் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

இந்த விழாவுக்காக அவர் நாளை பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது மாநில பிஜேபி.

ரஜினி வருவாரா?

இந்த விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகையைத்தான். அவரது குரு தயானந்த சரஸ்வதிதான் புத்தகத்தை வெளியிடுகிறார் என்பதால் ரஜினியின் வருகையை உறுதியாக எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கெனவே இந்த விழாவுக்காக ஜெயலலிதா – ரஜினி இருவரையும் ஒரே மேடையில் ஏற்றத் திட்டமிட்டிருந்தது பிஜேபி தலைமை. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ரஜினி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராகவாவது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என ரஜினிக்கு பிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான அழைப்பை பிஜேபியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் ரஜினிக்கு நேரில் கொடுத்துள்ளனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பரான சோவும் இதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். அத்வானியுடன் மேடையேறி அரசியல் பேசுவாரா... அல்லது எச்சரிக்கையுடன் வெறும் பார்வையாளராக நின்றுவிடுவாரா ரஜினி? பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+