நிலவு கைக்கெட்டும் தூரத்தில் சந்திராயன்!
பெங்களூர்: நிலவின் இறுதிச் சுற்றுப்பாதையில் சந்திராயன் வெற்றிகரமாக விடப்பட்டுள்ளது. நாளை அதில் உள்ள மூன் இம்பாக்ட் புரோப் (moon impact probe), நிலவின் தரைப் பரப்பில் இறங்கி, இந்திய தேசியக் கொடியை நடுகிறது.
நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம், சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இஸ்ரோ வரலாற்றிலேயே மிக அதிக உயரத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள சந்திராயன்-1க்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் நேற்று மேலும் குறைக்கப்பட்டு இறுதிச் சுற்றுப் பாதையில் விடப்பட்டது.
இந்தப் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரிக், டிராக்கிங் கண்காணிப்பு மையம் மேற்கொண்டது.
நிலவிலிருந்து 200 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த சந்திராயனை, நேற்று விஞ்ஞானிகள், 100 கிலோமீட்டர் உயரத்திற்கு குறைத்து இறுதி சுற்றுப்பாதையில் விட்டனர்.
440 நியூட்டன் திரவ என்ஜினை இயக்கி இந்த பணி முடிக்கப்பட்டது. இதன் மூலம் திட்டமிட்ட சுற்றுப் பாதைக்கு சந்திராயன் வந்து விட்டது. தற்போது நிலவை சந்திராயன் சுற்றி வர ஆகும் காலம் 2 மணி நேரமாக
குறைந்துள்ளது.
இங்கிருந்தபடியே நிலவு குறித்த ஆய்வுகளை இனி சந்திராயன் மேற்கொள்ளும். இதற்காக சந்திராயனுடன் இணைக்கப்பட்டுள்ள 11 உபகரணங்களும் இனி செயல்படத் தொடங்கும். ஏற்கனவே டெரைன் மேப்பிங் கேமராவும், ரேடியேஷன் டோஸ் மானிட்டரும் செயல்படத் தொடங்கி விட்டன.
அடுத்த கட்டமாக சந்திராயனில் உள்ள மூன் இம்பாக்ட் புரோப், கருவி, சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கவுள்ளது. இதுதான் மிகப் பெரிய நிகழ்வாகும். இந்தியாவின் தேசியக் கொடியும் நிலவில் நாட்டப்படும். இந்த நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications