கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மசோதா
சென்னை: கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்பதற்கு போலிச் சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்தும், சட்டத்தின் படி உரிய தண்டனையையும் வழங்க வேண்டுமென தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி கமிஷன் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் இதை அமல்படுத்தும் வகையில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார்.
இதுதவிர, நில உச்சவரம்புக்கு அதிகமாக ஏற்கனவே பெறப்பட்ட நிலங்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை செல்லுபடியாக்கும் வகையிலும், இதற்கான அனுமதியை அளிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் வகையிலும், அனுமதிக்காக விண்ணப்பம் செய்வதற்கு கால அளவை நிர்ணயிக்கவும், நில உச்சவரம்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படும். கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு தங்களுக்கு சாதகமாக இல்லை என கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தியதால் தற்போது அந்த சட்டம் ரத்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications