குளச்சல் மீன்பிடி துறைமுக கட்டுமானப் பணி தொடக்கம்
குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் பிடி துறைமுகம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
இயற்கை துறைமுக நகரமான குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு 27 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் இத்துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 31ம் தேதி துறைமுகம் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது.
துறைமுக பணிக்காக கடல் அலையை தடுக்க பயன்படுத்தப்படும் ராட்சத பாறங்கற்கள் முதலில் கிடைக்காததால் பணியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது ராட்சச பாறாங்கற்கள் பெரிய லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இதனையடுத்து பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
முதற்கட்டமாக துறைமுகம் அமையம் இடத்தில் கடற்கரையில் உள்ள மணலைத் தோண்டி அப்புறப்படுத்திவிட்டு ராட்சத பாறங்கற்களை நிரப்பி கடல் அலையை தடுக்கும் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்தி வருகிறது.
மேலும் குளச்சல் கடற்கரை வழியாக மீன்பிடி துறைமுகத்திற்கு பெரிய லாரிகள் மற்றும் ராட்சத இயந்திரங்கள் செல்ல வசதியாக ஜேசிபி மற்றும் ஹிட்டாச் இயந்திரங்கள் மூலம் ரோடு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications