சட்டக்கல்லூரி காட்டுமிராண்டித்தனம்: உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமாக மோதிக் கொண்டதை கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 எஸ்ஐகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதலுக்குக் காரணமான 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 4ம் ஆண்டு மாணவர்கள் பாரதி கண்ணன், சித்திரை செல்வன், மூன்றாம் ஆண்டு மாணவர் ஆறுமுகம், இரண்டாம் ஆண்டு மாணவர் அய்யாதுரை ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கண்ணெதிரில் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் நடந்தும், அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சென்னை ஐகோர்ட் உதவி கமிஷனர் நாராயணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சேகர்பாபு ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எஸ்பிளனேடு காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+