சென்னையில் இன்னொரு மோதல்-தமிழ் மாணவர்களைத் தாக்கிய வட இந்தியர்கள்!

Subscribe to Oneindia Tamil

Hindustan college
சென்னை: சென்னை அருகே உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில், தமிழ் மாணவர்களை வட இந்திய மாணவர்கள் தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சட்டக் கல்லூரி வன்முறைச் சம்பவம் மக்கள் மனதை விட்டு இன்னும் அகலாத நிலையில், சென்னை அருகே உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கும், வட இந்திய மாணவர்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. இதில் 3 தமிழக மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

கேளம்பாக்கம் அருகே படூர் என்ற இடத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன.

இங்கு இன்று காலை விடுதி உணவகத்தில் கொடுக்கப்பட்ட சாப்பாடு தொடர்பாக வார்டனுக்கும், வட இந்திய மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வட இந்திய மாணவர்கள், வார்டனை அடிக்க முயன்றுள்ளனர். இதையடுத்து ஒன்று திரண்ட தமிழக மாணவர்கள், வட இந்திய மாணவர்களைத் தடுக்க முயன்றனர்.

தாக்க விடாமல் தடுத்ததால், தமிழக மாணவர்கள் மீது வட இந்திய மாணவர்கள் தாக்குதலில் இறங்கினர். இதில் 3 தமிழ மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் விரைந்து வந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் மூண்டு விடாமல் தடுக்கும் வகையில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+