முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்பு
சங்கரன்கோவில்: சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களை தாக்கப்பட்டதை கண்டித்து மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி மாணவர்கள் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மை எரித்தனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர் பேரவை தலைவர் தனவீர பாண்டியன், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கல்லூரி நுழைவு வாயிலில் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தனவீரபாண்டியன் கூறுகையில், சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்கலைக் கழகத் தேர்வை புறக்கணித்துள்ளோம்.
தாக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். சென்னை சட்டக் கல்லூரிக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயரை மாற்ற வேண்டும்.
கலவரத்திற்கு காரணமான சட்டக் கல்லூரி முதல்வர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். மாணவர்களை தாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினமா செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications