நிதி நெருக்கடி: இந்தியாவைப் பாதிக்கும் - மன்மோகன் சிங்

வாஷிங்டனில் ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், உலகளாவிய நிதி நெருக்கயால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் என்ற அளவிலிருந்து 7 சதவீதமாக குறையும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியிலிருந்து வளரும் நாடுகளைக் காக்க உலக வங்கி மற்றும் பிராந்திய வளர்ச்சி வங்கிகள் வளரும் நாடுகளுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்க வேண்டும். அப்போதுதான் வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் தேக்கம் ஏற்படாது.
நெருக்கடி நீங்கி, பொருளாதாரம் ஸ்திரமடைந்து, முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் இந்தத் திட்டங்களை தடையின்றி மேற்கொள்ள வழி பிறக்கும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படாமல் தடுக்க உலகளாவிய நிதி கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். வளர்ச்சி அடை நாடுகள் வளரும் நாடுகளுக்கு செல்லும் தனியார் முதலீடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications