சர்ச் தூண் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிறிஸ்துவ தேவாலய கான்க்ரீட் தூண் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் பரிதாமாக பலியானான்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்ந்தட்டை அருகே உள்ளது நெற்குணம். இங்குள்ள பசும்பொன் சாலையில் கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் முன்பு பள்ளிச் சிறுவர்கள் சிலர் விளையாடுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று கான்கிரீட் தூண் பெயர்ந்து விழுந்தது. இதில் தமிழ்செல்வன் (7) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
அருகில் நின்று கொண்டிருந்த பிரதீப், அபிராமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துதீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications