கல்லூரி வன்முறை: உசிலம்பட்டி, விருதுநகரில் பஸ்கள் மீது கல்வீச்சு

Subscribe to Oneindia Tamil

உசிலம்பட்டி: சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி, மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

சென்னை சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டன. இதை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை, மற்றும் மதுரையில் பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

மதுரையில் மட்டும் சுமார் 41 பஸ்கள் கல் வீச்சில் சேதப்படுத்தப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பஸ்கள் இரவு நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.

பொது மக்களின் பாதுகாப்பிற்காக தென் மாவட்டங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் உசிலம்பட்டியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 பஸ்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி மலையாண்டி கலையரங்கம் முன்பு மர்ம நபர்களால் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

அதேபோல விருதுநகர் மாவட்டம், சங்கரன் கோவிலிலும் அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்களை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+