12வது முறையாக சேலம் உருக்காலைக்கு தேசிய விருது!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் உருக்காலைக்கு இந்திய உலோகக் கழகத்திடமிருந்து தொடர்ந்து 5வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்திய உலோகக் கழகத்திடமிருந்து 2007-08ம் ஆண்டின் நீடித்த செயல்பாட்டுத் தன்மைக்கான பெருமைமிகு தேசிய விருதினை பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை பெற்றுள்ளது.
நவம்பர் 14ம் தேதி அன்று டில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ரசாயன, உரம் மற்றும் உருக்குத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இந்த விருதை வழங்க சேலம் உருக்காலையின் நிர்வாக இயக்குனர் பி.பி.சிங் பெற்றுக் கொண்டார்.
இந்த விருதை தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும், விருது துவங்கப்பட்ட நாள் முதல் 12வது முறையாகவும் இந்த விருதை சேலம் உருக்காலை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications