சீனாவுடன் அணு யுத்தம் மூளும் வாய்ப்புள்ளது: பரத் கர்னாட்

Subscribe to Oneindia Tamil

Nuclear Warhead
மும்பை: இயற்கை வளங்களை அடைவதற்காக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அணு யுத்தம் கூட மூளும் வாய்ப்பு உள்ளதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினரான பரத் கர்னாட் கூறியுள்ளார்.

இந்தியாவின் அணுக் கொள்கை என்ற நூலை பரத் கர்னாட் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவின் ராணுவ நிபுணர்கள், தங்களது கவனத்தை பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கு திருப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

மும்பை பங்குச் சந்தையில் உள்ள முதலீடுகளில் நான்கில் ஒரு பங்குதான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஜிடிபி. எனவே பாகிஸ்தான் நமக்கு நிச்சயம் மிரட்டலே கிடையாது.

ஆனால் உலகெங்கிலும் உள்ள இயற்கை வளங்களை அடைவது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்கனவே போட்டி தொடங்கி விட்டது.

இந்தியாவுக்கு எதிராக தனது ராணுவ மற்றும் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்த தொடங்கி விட்டது சீனா.

தற்போது யார்லங்- சாங்கோ ஆற்றை குறி வைத்துள்ளது சீனா. இந்த ஆறுதான் இந்தியாவுக்குள் பிரம்மபுத்திரா நதியாக நுழைகிறது.

திபெத்தில் இந்த ஆற்றுக்கு குறுக்கே அணையைக் கட்டி அதை திருப்பிவிட சீனா முயன்று வருகிறது. இந்த ஆற்றில் சீனா கை வைத்தால், அது அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களையும், வங்கதேசத்தையும் மிகக் கடுமையாக பாதிக்கும். இங்கெல்லாம் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் ஏற்படும்.

இதுதவிர, வட கிழக்கில் உள்ள நக்சலைட்டுகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சீனா தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்து வருகிறது. இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறும்.

திபெத் இந்தியாவுக்கு முக்கியம்:

தலாய் லாமாவின் பாதையை பின்பற்ற விரும்பாத, புதிய தலைமுறை திபெத்தியர்களை உறுதியாக ஆதரிக்கும் தைரியம் இந்தியாவுக்கு வர வேண்டும்.

திபெத் என்ற நடுநிலைப் பிராந்தியம் (Buffer) இருப்பது இந்தியாவுக்கு முக்கியமானது. உண்மையி்ல் திபெத்துக்குள் சீனா ஆக்கிரமித்து நுழைந்த பிறகுதான் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் அரசியல் சூழ்நிலை தற்போது பலவீனமானதாக உள்ளது. ஒருவேளை இந்தியா மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், திருப்பி அடிக்கும்படி அரசு உத்தரவிடுமா என்பதே சந்தேகம்தான்.

பனிப்போர் காலத்தின்போது அணு ஆயுதங்களை தாக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தன வல்லரசுகள். ஆனால் உண்மையில் அவை பயன்படுத்தப்படவில்லை. அதே உத்தியைத்தான் நமது நாடும் தற்போது கையாள வேண்டும்.

இந்தியா, வீரர்களால் கையாளக் கூடிய வகையிலான எளிய அணு குண்டுகளைத் தயாரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்திய படையில், அணு ஆயுத போர்க் கப்பல், 5000 கிலோமீட்டர் தொலைவில் சென்று தாக்கும் அக்னி ஏவுகணை, ரஷ்யாவின் டி-160 பிளாக்ஜாக் டாங்குகள் ஆகியவற்றை சேர்க்க 2012ம் ஆண்டு ஆகி விடும் என்றார் கர்னாட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+