தூத்துக்குடியில் துப்பாக்கி திருட்டு- 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் துப்பாக்கி திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் நேற்று முன்தினம் பைக்கை திருடி செல்ல முயன்ற ஒரு நபரை மக்கள் மடக்கி பிடித்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட ஜெயக்குமார் கோஷ்டியை சேர்ந்தவர் என்பதும் தூத்துக்குடி மினிசாகயபுரத்தை சேர்ந்த ஜெபஸ்டியன் என்பது தெரிய வந்தது.
கடந்த மாதம் தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள ஒரு லாரி புக்கிங் ஏஜென்சியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் ஜெபஸ்டியனுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளியான மினி சகாயபுரத்தை சேர்ந்த பிராங்கிளின் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications