ரூ. 1 கோடி நஷ்டஈடு கோரி கருணாநிதிக்கு ஜெ. வக்கீல் நோட்டீஸ்
சென்னை: சட்டக் கல்லூரி மோதலை தூண்டி விட்டதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக கோவையில் முதல்வர் கருணாநிதியிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதாவும், வைகோவும் இதை தூண்டி விட்டார்களோ என்னவோ என்று கூறியிருந்தார்.
இதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரித்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா வழக்க தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு, ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், சென்னை சட்டக்கல்லூரி யில் 12-ந் தேதி நடந்த மாணவர்கள் மோதலை ஜெய லலிதா தூண்டி விட்டதாக கோவையில் நடந்த பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது.
தவறான தகவல், ஜெய லலிதாவின் புகழுக்கு களங் கம் கற்பிக்கும் செயல், நீதி மன்றத்தில் இருக்கும் ஒரு பிரச்சினையை திசை திருப்புவதாகும். எனது கட்சிக்காரர் வன்முறையில் ஈடுபடும்படி யாரையும் தூண்டி விடவில்லை.
என் கட்சிக்காரர் அ.தி. மு.க. பொதுச் செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். அவர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், எழுத்து மூலம் மன்னிப்பு கேட்பதுடன் பத்திரிகைகளிலும் அது வெளியாக வேண்டும்.
தவறினால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவதூறு பரப்பிய தற்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications