ரூ. 1 கோடி நஷ்டஈடு கோரி கருணாநிதிக்கு ஜெ. வக்கீல் நோட்டீஸ்
சென்னை: சட்டக் கல்லூரி மோதலை தூண்டி விட்டதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக கோவையில் முதல்வர் கருணாநிதியிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதாவும், வைகோவும் இதை தூண்டி விட்டார்களோ என்னவோ என்று கூறியிருந்தார்.
இதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரித்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா வழக்க தொடர்ந்தால் அதை சந்திக்கத் தயார் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு, ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், சென்னை சட்டக்கல்லூரி யில் 12-ந் தேதி நடந்த மாணவர்கள் மோதலை ஜெய லலிதா தூண்டி விட்டதாக கோவையில் நடந்த பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது.
தவறான தகவல், ஜெய லலிதாவின் புகழுக்கு களங் கம் கற்பிக்கும் செயல், நீதி மன்றத்தில் இருக்கும் ஒரு பிரச்சினையை திசை திருப்புவதாகும். எனது கட்சிக்காரர் வன்முறையில் ஈடுபடும்படி யாரையும் தூண்டி விடவில்லை.
என் கட்சிக்காரர் அ.தி. மு.க. பொதுச் செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். அவர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், எழுத்து மூலம் மன்னிப்பு கேட்பதுடன் பத்திரிகைகளிலும் அது வெளியாக வேண்டும்.
தவறினால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவதூறு பரப்பிய தற்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications