காவிரிப் பிரச்சனையில் தலையிட முடியாது-பாஜக
கோவை: காவிரிப் பிரச்சனையில் பாஜக தலையிட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சனையில் அரசியல் ரீதியான தீர்வு தேவை என்று இந்திய பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கூறி வருகின்றனர்.
ஆனால் இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது நின்றபாடு இல்லை.
இந்தப் பிராந்தியத்தில் சர்வ வல்லமை படைத்த இந்திய அரசு சொல்லியும் கூட இலங்கை கேட்க மறுக்கிறது என்றால் மத்திய அரசின் பலவீனமான போக்கே காரணம்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இலங்கை எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க கூடாது என சொல்லப்படவில்லை. ஆனாலும் அங்கு மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் நடத்துகிறது.
இதன் மூலம் நம்மீது இலங்கை மறைமுக போரை நடத்துகிறது.
காவிரிப் பிரச்சனையில் பாஜக தலையிட முடியாது. இந்த பிரச்சனையில் இரு மாநில முதல்வர்களும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications