தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
சென்னை: தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. பவுன் தங்கம் ரூ. 10 ஆயிரத்தை நோக்கி எகிறத் தொடங்கியுள்ளதால் மக்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பவுன் விலை ரூ.10 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வரலாறு காணாத உயர்வு காணப்பட்டது. கடந்த மாதம் 10-ந் தேதி பவுன் விலை 10,480 ரூபாயை தொட்டது. அதை தொடர்ந்து விலை சரியத் தொடங்கியது.
நவம்பர் முதல் வாரத்தில் பவுன் ரூ.8656-க்கு விற்கப்பட்டது. விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உயரத் தொடங்கியது.
நேற்று பவுன் ரூ.9024-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.40 அதிகரித்தது.
இன்று பவுன் விலை ரூ.9064. ஒரு கிராம் ரூ.1133-க்கு விற்கப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் பவுன் விலை விரைவில் ரூ.10 ஆயிரத்தை மீண்டும் எட்டிவிடும்.
தற்போது திருமண சீசன் என்பதால் தங்கத்திற்கு கிராக்கி கூடியுள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பாதுகாப்புக்காக தங்கத்தின் பக்கம் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனாலும், தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருவதாக தெரிகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலை குறைந்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications