கரூரில் அரசு உயர் அதிகாரி ஜீப் மாயம்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் வட்ட வழங்கல் அலுவலர் ஜீப் மாயமானது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கரூர் தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக இருப்பவர் கணேசமூர்த்தி. இவரது ஜீப்புக்கு கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் தற்காலிக டிரைவராக பணியாற்றி வருகிறார்.

கணேசமூர்த்தி பணி முடிந்து ஜீப்பை அலுவலகத்தில் விட்டு விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த ஜீப்பை காணவில்லை என்று அவரது டிரைவர் குமார் மறுநாள் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி இது குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் தற்காலிக டிரைவர் குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவர் குமார் ஜீப்பை வீட்டிற்கு எடுத்துச் சென்றதும், ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் போட்டதும் தெரிய வந்தது.

இதனையடு்த்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+