உணவு, மருந்து தடையை எதிர்த்து வன்னியில் தமிழர்கள் பேரணி
தருமபுரம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் பேரணிகள் இடம்பெற்றன. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி தருமபுரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டன முழக்கங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு தருமபுரம் பாடசாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.
கிளிநொச்சியில் உள்ள அரசு செயலகம் செயலகம் வரை பேரணியாகச் சென்றனர். அங்கு வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பினர் தலைவர் நா.அரசரத்தினம் தலைமையில் கண்டனக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் கிளிநொச்சி அரசு செயலாளர் வேதநாயகனிடம் இலங்கை படையினரால் தமிழர்கள் படும் சிரமங்களை விளக்கி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கும் வன்னி மக்கள் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஒட்டுசுட்டானிலும் பேரணி நடந்தது.வன்னி மக்கள் நலன்பேணும் அமைப்பின் துணைத்தலைவர் சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் கண்டன உரையை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் பொது அமைப்புகளின் ஒன்றியச் செயலர் நாகேந்திரராசா உள்ளிட்டோர் பேசினர்.
இந்தப் பேரணிகளில் பெண்களும், முதியோர்களும், சிறார்களும் பெருமளவில் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications