தமிழக நிவாரணப் பொருட்கள் வன்னியை அடைந்தன

Subscribe to Oneindia Tamil

UN Vanni
வன்னி: தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கொழும்பிலிருந்து வன்னிக்குச் சென்றுள்ளன. ஐ.நா. மனித உரிமை கழகம் இந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது.

தமிழர் பகுதிகளில் இலங்கை படைகள் நடத்தி வரும் கடும் போரால் தத்தளித்து வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகிறது.

இதுவரை சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களான உணவு, உடை, மருந்து உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு உரிய சோதனைக்குப் பின்னர் இந்தியத் தூதரிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து இந்த நிவாரணப் பொருட்கள் 56 லாரிகள் மூலம் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வன்னிப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான ஓமந்தையில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் அனைத்து பொருட்களும் முறையாக சோதிக்கப்பட்டன. பின்னர் உள்ளே செல்ல லாரிகள் அனுமதிக்கப்பட்டன.

இந்த லாரிகள் நேற்று வன்னியைச் சென்றடைந்தன. நிவாரணப் பொருட்களுடன் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் உடன் வந்துள்ளனர்.

இருப்பினும் நிவாரணக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ் அதிகாரிகளை, ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி விட்டனர்.

வன்னிப் பகுதியில், செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலமாக தமிழக நிவாரணப் பொருட்களின் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+