மதுரை திருமங்கலம் இடைத் தேர்தல்-குப்தா ஆய்வு!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, மதுரையில் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் சீதாராமன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வாசுகி மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் மீண்டும் இடம் பெறச் செய்வது, மற்றும் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
சமீபத்தில் திருமங்கலம் தொகுதி மதிமுக எம்எல்ஏ வீரஇளவரசன் மரணமடைந்தார். அதனால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications