தமிழ் எம்.பிக்கள் மாநாடு-லண்டன் செல்லும் வைகோ
Subscribe to Oneindia Tamil

லண்டனில், தமிழ் பேசும் நாடாறுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் எம்.பிக்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் வருகிற 26ம் தேதி லண்டனில் மாநாடு நடைபெறுகிறது. இதில் வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார். இதற்காக அவர் பொடா நீதிமன்றத்தின் அனுமதியை கோரியிருந்தார். பொடா கோர்ட்டும் வைகோ லண்டன் செல்ல அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து 24ம் தேதி காலை அவர் சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டை முடித்துக் கொண்டு 30ம் தேதி சென்னை திரும்புகிறார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழ் பேசும் எம்.பிக்கள் இதில் பங்கேற்கிறார்கள்.












Click it and Unblock the Notifications