விமான நிலையத்திற்கு தங்கக் கம்பியுடன் வந்த பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு தங்கக் கம்பியுடன் வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்தத் தங்கக் கம்பியின் மதிப்பு ரூ. 15.40 லட்சமாகும்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், மங்கள் ஈஸ்வரி என்ற 47 வயது பெண் நேற்று இரவு கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக இரவு 8.40 மணஇக்கு வந்தார்.
அவர் இரு சூட்கேஸ்களை வைத்திருந்தார். வழக்கமான சுங்கப் பரிசோதனையின்போது அவரிடம் 1.60 கிலோ எடையுள்ள தங்கக் கம்பி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தங்கக் கம்பி பறிமுதல் செய்யப்பட்டது. மங்கள ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் என்றனர்.












Click it and Unblock the Notifications