பைலட்டுகள்-ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் 'ஜெட்'!

இதற்காக அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பைலட்டுகள், கேபின் க்ரூ ஊழியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களிடம் பேச்சு நடத்துகிறார் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல்.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:
சம்பள வெட்டு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தக் காலாண்டில் மட்டும் 400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த காலாண்டிலும் திருப்தியான நிலை இல்லை.
எனவே நிச்சயம் 25 சதவிகித சம்பளக் குறைப்பை அமல்படுத்த உள்ளோம். ஊழியர்கள் அனைவரும் 20 சதவிகித சம்பளக் குறைப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால் பைலட்டுகளும், என்ஜினீயர்களும்தான் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் பேச முடிவு செய்துள்ளோம், என்றார்.
ஜெட் நிர்வாகம் உள்ளூர் விமானிகளுக்கு குறைந்த சம்பளமும், வெளிநாட்டு விமானிகளுக்கு இரு மடங்கு அதிக சம்பளம் கொடுப்பதையும் ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர். சமீபத்தில்தான் 35 வெளிநாட்டு விமானிகளை ஜெட் நீக்கியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications