நிதி நெருக்கடி தீர ரூ.150 கோடியில் யாகம்! 3,000 சாமியார்கள் பங்கேற்பு
காந்தி நகர்: உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தைச் சரிபண்ண ஒபாமா தொடங்கி, உள்ளூர் ஷேர் புரோக்கர்கள் வரை பலவித யோசனைகளைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் குஜராத்தில் சாமியார்கள் கோஷ்டி ஒன்று புதுவித யாகம் ஒன்றை அறிவித்துள்ளது.
துர்கை அம்மன்தான் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என 3 ஆயிரம் சாமியார்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு யாகத்தை தொடங்கி உள்ளனர்.
மேசானா மாவட்டம் ராமசானாவில் இந்த யாகம் நடக்கிறது. தடங்கலில்லாமல் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு நடத்தப்படும் யாகம் இது. இதற்காகும் செலவு ரூ.150 கோடியாம்!
கோடி சந்தி மகாயக்ன சேவா சமிதி (கேசிஎம்எஸ்எஸ்) என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் தவிர சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் இதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். யாகம் இப்போது 15 நாட்களை கடந்துவிட்டது. இடையே நிறுத்தப்படாமல், இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து யாகம் நடைபெறும்.
முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசும் இதற்குத் தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது.
இந்தியாவை ஒருத்தராலும் அசைச்சுக்க முடியாது... அசைச்சுக்க முடியாது!!